முகப்பு /செய்தி /தூத்துக்குடி / சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்களை தொடர்ந்து அடிக்க தூண்டிய எஸ்.ஐ - பெண் காவலர் சாட்சியம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்களை தொடர்ந்து அடிக்க தூண்டிய எஸ்.ஐ - பெண் காவலர் சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை

Sathankulam | அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர்  23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sathankulam, India

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை, மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர் . அப்போது  விசாரணையின் போது காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த கொலை வழக்கு,  மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து  வருகிறது. நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது  இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ்,  பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில்ஆஜராகினர்.

இந்த வழக்கின் சாட்சியாக, தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேற்று நேரில் ஆஜராகி, தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சம்பவத்தின் போது பணியில் இருந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் சேர்ந்து தொடர்ச்சியாக தாக்கி உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தியதாக சாட்சியம் அளித்தார்.

தந்தை ஜெயராஜை  காவலர்கள் தாக்கிய போது, அவர் தனக்கு சுகர் மற்றும் பிரசர்  உள்ளதால் , மேலும் தன்னை தாக்க வேண்டாம்  என கூறி இதற்கு மேலும் தன்னை அடிக்க வேண்டாம் என்று மன்றாடினார். அதே நேரேத்தில், மகன் பென்னிக்ஸ்,  காவலர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

Also see... சாலையில் டேபிள் போட்டு சீயர்ஸ் அடிக்கும் குடிமகன்கள்..! - டாஸ்மாக் பார் ஊழியர்களின் துணையுடன் அத்துமீறல்

இதனால்  போலீசார் அடிப்பதை நிறுத்தியதை பார்த்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஏன் அடிப்பதை நிறுத்தி விட்டீ,ர்கள்?  தொடர்ந்து போலீசாரை மீண்டும் அடிக்க சொன்னதாகவும் சாட்சியம் அளித்தார். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும்  23 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

First published:

Tags: Madurai High Court, Murder case, Sathankulam, Thoothukudi