தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மீனவர் கிராமம் அமலிநகர். இங்குள்ள மீனவர்கள் தினமும் நள்ளிரவு பைபர் படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு அன்று மாலையில் கரை திரும்புவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதேபோல் மீனவர்கள் நள்ளிரவு மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற படகுகள் ஒவ்வொன்றாக கரைக்கு வந்து நிலையில், அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் (32), பிரசாத் (40), பால்ராஜ் (22), நித்தியானந்தம் (42) ஆகியோர் சென்ற படகு மட்டும் கரை திரும்பவில்லை.
அந்த படகு பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்தது தெரியவந்தது. இதில் பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் கடலில் தத்தளித்ததை பார்த்த மற்ற படகில் சென்ற மீனவர்கள் காப்பாற்றினர். மேலும் அஸ்வின், பிரசாத் ஆகியோரை தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடலில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்ததால் மீட்கப்பட்ட இரண்டு பேரை மட்டும் கரைக்கு அழைத்து வந்தனர். இந்த தகவலறிந்த அமலிநகர் மீனவர்கள் 7 படகில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கடலுக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
Must Read : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்
மாயமான அஸ்வினுக்கு மோனிகா என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரசாந்திற்கு ஸ்டெபிலா என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - பி.முரளிகணேஷ்.
உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.