தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி மாணிக்கராஜ், ரேஸ்மா இருவரும் வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரேஸ்மா (19), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (28).
வெளிநாட்டில் வேலை பார்த்த மாணிக்கராஜ் ஊருக்கு திரும்பி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் முத்துக்குட்டி, மாணிக்கராஜ்க்கு மாமா முறை என்று கூறப்படுகிறது. மாணிக்கராஜ்க்கும், ரேஸ்மாவுக்கும் காதல் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு முத்துக்குட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது மகளுக்கு முத்துக்குட்டி வேறொரு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் கடந்த 28 ஆம் தேதி மதுரை திருமங்கலத்திற்கு சென்று காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணம் செய்த பிறகு ஊருக்கு வராமல் இருந்த தம்பதியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் மாணிக்கராஜ் - ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்த போது, முத்துக்குட்டி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தம்பதி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து தகவல் கிடைத்தும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தம்பதியின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டியை கைது செய்த பின்னர் தான், இந்த கொலைக்கான முழு விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kovilpatti, Murder, Newly married couple