தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழிக்கு தூத்துக்குடி குறிஞ்சி நகரில் வீடு மற்றும் அலுவலகம் அடுத்தடுத்து அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு அங்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், வீட்டின் கதவை நீண்ட நேரம் உற்றுநோக்கி பார்த்திருந்தார். சந்தேகப்படும்படியாக இந்த நபரின் நடவடிக்கை இருந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் மிக அருகே உள்ள தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.
அதற்குள் மர்ம நபர் வீட்டின் காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மர்ம நபரை எம்பி அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் பிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க : 2ம் நிலை காவலர் பணித் தேர்வு: 67,000 பேர் ஆப்சென்ட்
இந்த மர்ம நபரிடம் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கனிமொழி எம்.பியின் தூத்துக்குடி அலுவலக உதவியாளரிடம் கேட்டபோது, நேற்று ஒரு நபர் உள்ளே நுழைய முன்றதாகவும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
கனிமொழி எம்பியின் வீட்டில் புகுந்த மர்ம நபரால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி செய்தியாளர் - முரளிகணேஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Crime News, DMK, Kanimozhi, Thoothukudi