முகப்பு /செய்தி /தூத்துக்குடி / சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை

அமைச்சர் கீதாஜீவன்

அமைச்சர் கீதாஜீவன்

Minister geetha jeevan release | அமைச்சர் கீதாஜீவனின் தந்தை என்.பெரியசாமி மீது 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன் இன்று விடுதலையானார்.

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏவும் அமைச்சர் கீதா ஜீவனின் தந்தையுமான என்.பெரியசாமி மீது 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதில், 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்த என்.பெரியசாமி வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவன் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ALSO READ | 10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

இந்த வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கீதாஜீவனின் தந்தை உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 5 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுவது நிரூபிக்கப்படவில்லை என கூறி 5 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நீதி கிடைத்துள்ளதாகவும், நியாயம் வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்: சிவமணி, தூத்துக்குடி.

First published:

Tags: Court, Income tax, Released