முகப்பு /செய்தி /Thoothukudi / கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி - தூத்துக்குடியில் பயங்கரம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி - தூத்துக்குடியில் பயங்கரம்

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை

Thoothukudi : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை   கள்ளக்காதலன் கொலை செய்ய மனைவியே உடந்தையாக இருந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடி அருகே பேரூரணியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கனவனை கொலை செய்த கள்ளக்காதலன், கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பேரூரணி கிராமத்தை  சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36). இவா் வெளி மாநிலங்களுக்கு சென்று வரும் லாரியில் டிரைவராக வேலை பாா்த்தது வந்தாா். இவருக்கு திருமணமாகி கனகலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான கருப்பசாமி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் லாரியில் வெளிமாநில நடைக்கு சென்று மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 7ந்தேதி  கருப்பசாமி  வீட்டுக்கு வந்துள்ளார்.  அன்று குடும்பத்தினருடன் கருப்பசாமி இரவில் உணவருந்தி விட்டு வீட்டின் வெளியே  படுத்து தூங்கியுள்ளாா். உள்ளார். மறுநாள் காலை பார்த்த பொழுது  வீட்டின் முன்பே கருப்பசாமி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து தட்டாபாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசாாின் சந்தேக பாா்வை கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமி மீது திரும்பியது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது செல்போனுக்கு ஒரு நம்பரிலிருந்து அடிக்கடி அழைப்பு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கனகலட்சுமியிடம் தொடா்ந்த கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

Also Read:  முட்டத்தில் தாய்-மகள் கொலை... முக்கிய தடயமாக கிடைத்த மங்கி குல்லா - வீடியோ வெளியிட்ட டி.எஸ்.பி

கணவர் கருப்பசாமி அடிக்கடி குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்து வந்தார்.  கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கடம்பூர் மகளிர் காவல் நிலையம் வரை சென்றது. அப்போது கனகலட்சுமியின் உறவினர் சோழபுரத்தை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் என்பவர் கனகலட்சுமிக்கு ஆதரவாக உதவி செய்தாா். பின்னர் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். ரவிசந்திரனிடம் போனில் பேசி வருவதை தெரிந்து கொண்ட கருப்பசாமி மனைவி கனகலெட்சுமியை கண்டித்தது மட்டுமின்றி,  சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கணவர் தன்னிடம் அடிக்கடி தகறாறு செய்வதை கனகலட்சுமி ரவிச்சந்திரனிடம் அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார். அவரும் கனகலட்சுமிக்கு ஆறுதல் சொல்ல நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கருப்பசாமியின் தொந்தரவும் அதிகரித்து வந்தது.  இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி வீட்டிற்கு வந்த கருப்பசாமி வெக்கை காரணமாக வீட்டின் வெளியே  தூங்கும் தகவலை அவரது மனைவி கனகலட்சுமி ரவிச்சந்திரனுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து அன்று இரவே பேரூரணிக்கு  வந்த ரவிச்சந்திரன் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த  கருப்பசாமியை  கத்தியால் கழுத்தை அறுத்தும், நெஞ்சில் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.  இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீசாா்  கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை   கள்ளக்காதலன் கொலை செய்ய மனைவியே உடந்தையாக இருந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்:  முரளிகணேஷ் (தூத்துக்குடி)

First published:

Tags: Crime News, Illegal affair, Illegal relationship, Murder, Thoothukudi, Tuticorin