தமிழக அரசின் ஆட்சி நன்றாக உள்ளது என நகைச்சுவை நடிகர் வடிவேலு திருச்செந்தூரில் பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று மாலை சாமி தரிசனம் செய்தார்.
அதன்பின்னர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடிவேலு, “நாய் சேகர் ரிட்டன், மாமன்னன் , சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக கூறினார். அரசியல் நமக்கு தேவையில்லை. சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்யலாம். தமிழக அரசின் ஆட்சி நன்றாக உள்ளது என்றார்.
Also Read: நடிகர் சங்கம் சார்பில் போண்டாமணியை சந்தித்து நிதி உதவி வழங்கிய மனோபாலா
சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டா மணிக்கு எதாவது உதவி செய்யணும் என்றார்.
செய்தியாளர்: முரளி கணேஷ் (தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vadivelu, Politics, Tamil News, Thiruchendur