முகப்பு /செய்தி /தேனி / வைகை அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு.. 5 மாவட்டங்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு.. 5 மாவட்டங்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணை

வைகை அணை

Theni district News : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71அடி உயரத்தில் அமைந்துள்ளது  வைகை அணை. முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை வனப்பகுதியில் தொடர் மழை பெய்துவருவதால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஜூலை 30ஆம் தேதி 66அடியை எட்டியது.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 68.5 அடியை எட்டியது. இதனால், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை:

இந்நிலையில் இன்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 69அடியை எட்டியதால் 5 மாவட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் இன்று பிற்பகல் அல்லது மாலைக்குள் 70அடியை எட்டியதும் 7 பெரிய மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடல்போல் காட்சியளிக்கும் வைகை அணை

எனவே, பொதுமக்கள் யாரும் குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ வைகை ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69அடியாகவும், நீர் இருப்பு 5,571 மில்லியன் கன அடியாக இருக்கிறது. அணைக்கு விநாடிக்கு 2,630கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து 70அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Must Read : அரக்கோணம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

தொடர் மழையால் வைகை  அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டி வருவதால் ஐந்து மாவட்ட விவசாயிகள்,  பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

செய்தியாளர் - பழனிகுமார்.

First published:

Tags: Flood warning, Madurai, Theni, Vaigai dam level