பொங்கல் பண்டிகை மற்றும் பனிப்பொழிவால் உண்டான வரத்து குறைவால் ஆண்டிபட்டி மலர் சந்தையில் 1கிலோ மல்லிகைப்பூ ரூ.3,500க்கு விற்பனை ஆகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, சின்னமனூர், சீலையம்பட்டி உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் மல்லிகை, முல்லை, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் பூக்கள் தேனி, சீலையம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி மலர் சந்தைகள் மூலம் உள்ளூர், வெளியூர் மற்றும் கேரளாவிற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது தேனி மாவட்டத்தில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. சராசரியாக ஏக்கர் ஒன்றில் தோராயமாக 10கிலோ அளவிற்கு பறிக்கப்படும் பூக்கள் வரத்தின்றி 1கிலோவுக்கு குறைவாக கிடைக்கிறது.
இந்நிலையில் எதிர்வரும் தைத்திங்கள் திருநாள் பண்டிகைக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை விண்ணுயர உயர்ந்து வருகிறது. ஆண்டிபட்டி மலர் சந்தையில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ மல்லிகை சராசரியாக ஆயிரத்திற்கும் குறைவாக விற்பனையான நிலையில் இன்று ரூ.3,500க்கு விற்பனையாகிறது. இதே போன்று முல்லை, கனகாம்பரம் மற்றும் பிச்சிப்பூக்கள் தலா 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பொங்கல் பண்டிகை மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை அடுத்தடுத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர்: பழனிகுமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pongal 2023, Tamil News, Theni