ஆண்டிபட்டி அருகே பட்டியலின விவசாயியின் முருங்கை பயிர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் சேதப்படுத்தியதாக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா, தனது 5 ஏக்கர் நிலத்தில் முருங்கை பயிரிட்டுள்ளார். அதற்கு அருகே உள்ள சுமார் ஒரு ஏக்கரிலான புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சுந்தரபாதம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு ராஜா மறுப்பு தெரிவித்ததால், சாதிபெயரை சொல்லி திட்டியதுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் அவரது பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜா, அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் அளித்த புகாரின்பேரில், சுந்தரபாதம் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து சுந்தரபாதம் கைது செய்யப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Theni