தேனி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ₹ 500 அபராதம்...
தேனி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ₹ 500 அபராதம்...
தேனி - முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Theni District : தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலும் கடந்த 3 மாதங்களாக பூஜ்ஜியமாக இருந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது இரட்டை இலக்க எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று நோய்த்தொற்று கண்டறியப்பட்ட 28 நபர்களில் ஆண்டிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மட்டும் 13 மாணவர்களுக்கு உறுதியானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட நடைமுறைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியது. இருந்த போதிலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பொது இடங்களில் கூடும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது.
.இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் பொது இடங்களுக்குச் செல்பவர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் காவல், வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினரால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.