தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருப்பது தஞ்சை மாவட்டம் என்பது நாம் அறிந்த ஒன்றே. இங்கு அறுவடை செய்யப்படும் நெல் தமிழகத்தின் நேரடி கொள்முதல் மையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு நெல் கொள்முதல் பருவத்திற்கு நெல் கொள்முதல்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் நடப்பாண்டில் அதிகபட்சமாக சம்பா பருவத்திற்கு 618 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் 193 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த கொள்முதல் நிலையங்கள் மூலம் தஞ்சையில் மட்டும் இதுவரை 7,89,500 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் நெல்கொள்முதல்
இதுகுறித்து விவசாய சங்கத்தினரிடம் விசாரித்த போது, ‘நடப்பாண்டு பதினோரு லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நெல் கொள்முதல் பருவம் முடிவடைய இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் நெல் கொள்முதல் இந்த ஆண்டு இலக்கு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 1,67,726 விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லை விற்பனை செய்து பயனடைந்துள்ளனர்.
நெல் கொள்முதலுக்காக இதுவரை 1,607 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்று நுகர் பொருள் வாணிப கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கதாகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.