தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை (13-12-2022) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மின் தடை பகுதிகள்:
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும், கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, வழுத்தூர், இளங்கார்குடி, அகரமாங்குடி, வடக்கு மாங்குடி ஆகிய பகுதிகளில் மின் தடை.
Must Read : இயற்கை எழில் கொஞ்சும் ஒகேனக்கல்.. குவிந்த சுற்றுலா பயணிகள்.. புகைப்படத் தொகுப்பு!
இதேபோல பசுபதிகோவில், மாத்தூர், வீரசிங்கம் பேட்டை, நெடார், வயலூர், ராமாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்படும் என பாபநாசம் உதவி செயற்பொறியாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur