முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ஆம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ஆம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் 17ஆம் தேதி (சனிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அர்பன், ராஜன் தோட்டம் துணை மின் நிலையங்களில் வருகிற 17ஆம் தேதி (சனிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனா காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : குற்றால அருவிகளுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

மின் தடை பகுதிகள்:

கும்பகோணம் நகர் முழுவதும் மற்றும் கொரநாட்டு கருப்பூர், செட்டி மண்டபம் மற்றும் மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குதலும் பராமரித்தாலும் கும்பகோணம் நகர் உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur