முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / நவ. 3-ம் தேதி ராஜராஜனின் 1037-வது சதய விழா! - தஞ்சை பெரிய கோயிலில் பந்தல்கால் நடும் விழா!

நவ. 3-ம் தேதி ராஜராஜனின் 1037-வது சதய விழா! - தஞ்சை பெரிய கோயிலில் பந்தல்கால் நடும் விழா!

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழனின் 1,037 வது சதய விழாவிற்கான, பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழனின் 1,037 வது சதய விழாவிற்கான, பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழனின் 1,037 வது சதய விழாவிற்கான, பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் வருகிற 3-ந் தேதி வருவதால், அவரது 1037-வது ஆண்டு சதய விழா அன்றைய தினம் நடைபெறவுள்ளது.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சதய விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, பெரிய கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.

முன்னதாக பந்தக்காலுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சதய விழாவை முன்னிட்டு வரும் நவ.2ம் தேதி பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது. நவ.3ம் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலா நடைபெறுகிறது.

பின்னர் பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோயில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

ராஜராஜசோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர்  உள்ளிட்ட 48 வகை பொருள்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தவுள்ளனர்.

Also see... மருது பாண்டியர்கள் குல தெய்வமாக வழிபட்டுவந்த தீ பாய்ந்த அம்மன் கோயில் பற்றி தெரியுமா?

top videos

    இரவு ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதிவுலா நடைபெறவுள்ளது.

    First published:

    Tags: Rajarajacholan, Thanjavur