தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(34). இவரும் பக்கத்து வீட்டு நண்பருமான செல்வகுமார்(24) ஆகிய இருவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பொட்டல் காட்டில் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் அருகில் கிடந்த கல்லை எடுத்து கருப்பசாமி தலையில் போட்டுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
இச்சம்பவம் பற்றி தகவலறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஊரில் மறைந்திருந்த செல்வகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் இருவருக்கும் இடையே மது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : செந்தில் - தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Tenkasi