குற்றால அருவிகளில் 5-வது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குற்றால அருவிகளில் 5-வது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குற்றலாம்
Tenkasi | மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் 5 வது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் கடை கட்டும். இந்த சீசனை அனுபவிப்பதற்கு உலகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததின் காரணமாக பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து வரத் துவங்கியது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கன மழையால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து 5வது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.