முகப்பு /செய்தி /தென்காசி / தென்காசி காதல் விவகாரம்.. கடத்தியவர்களிடமே கிருத்திகாவை ஒப்படைப்பதா? அரசு தரப்பு எதிர்ப்பு..!

தென்காசி காதல் விவகாரம்.. கடத்தியவர்களிடமே கிருத்திகாவை ஒப்படைப்பதா? அரசு தரப்பு எதிர்ப்பு..!

தென்காசி காதல் விவகாரம்

தென்காசி காதல் விவகாரம்

காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட வழக்கில், கிருத்திகாவைத் தொடர்ந்து காப்பகத்திலேயே தங்க வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

காதல் திருமணம் செய்த மனைவி கிருத்திகாவை அவரது பெற்றோர் கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டுத் தர கோரியும் தென்காசியை சேர்ந்த வினித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கிருத்திகா காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, 2வது நாளாக நடைபெற்ற விசாரணையின்போது கிருத்திகாவை அவரது தாத்தாவுடன் அனுப்ப வேண்டும் என தந்தை தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கடத்தியவர்களிடமே, பெண்ணை ஒப்படைப்பது நியாயமாக இருக்காது எனவும், அது இந்த வழக்கு விசாரணையை பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கிருத்திகாவை கேரளா வழியாக 5 கார்களில் குஜராத்திற்கு கடத்திச் சென்றதாகவும், அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, கிருத்திகாவைத் தென்காசி காப்பகத்திலேயே தங்க வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

First published:

Tags: Love marriage, Madurai High Court