ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் ப்ரீபெய்டு சேவைகளுக்கான கட்டணத்தை அண்மையில் உயர்த்திய நிலையில், இன்று ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது கட்டண உயர்வை நவம்பர் 26ம் தேதி முதல் அமல்படுத்திய நிலையில், வோடஃபோன் நிறுவனமும் உடனடியாக கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மற்ற நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜியோவும் தனது கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
அதன்படி, ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு டிச.1ம் தேதி முதல் அமலாகிறது. இந்த கட்டண உயர்வை தொடர்ந்து 28 நாட்களுக்கான ஜியோ போன் திட்டத்தின் கட்டணம் 75 ரூபாயில் இருந்து 91 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டேட்டா பிளானில், மாதத்திற்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான் ரூ.129லிருந்து, ரூ.155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airtel, Jio, Reliance Jio, Vodafone