இந்தியாவின் முதன்மையான இணையச் சேவையான ஜியோ நிறுவனம் இணையப் புரட்சியாக இந்தியாவில் அதிக வேக ட்ரு 5ஜி இணையச் சேவையைத் தொடங்கியது. இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் அதிவேக 5ஜி சேவை வழங்குவதையே இலக்காக வைத்து செயல்படுகிறோம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்தியா முழுவதும் 2022 அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் அதிவேக 5ஜி சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனில் முதல் கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய இடங்களில் 5ஜி சேவை செயல்பாட்டிற்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து, ஜியோ நிறுவனம் சார்பில் டெல்லி,மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, புனே, குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் மற்றும் குஜராத் மாநிலம் ஆகிய பகுதிகளில் உள்ள 33 மாவட்டங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.
2030 இறுதிக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவையைக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.
அந்த நோக்கில் அடுத்தகட்டமாகத் தமிழகத்தில் சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் உள்ளிட்ட 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை தொழில்நுட்ப துறை மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் மிட்டல் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.