ஜியோ நிறுவனத்தில் கடந்த ஆறு வாரங்களாக பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துவருகின்றன. இதுவரையில் உலக அளவிலான முதலீட்டாளர்களிடமிருந்து 97,885 கோடி ரூபாய் ஜியோவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், 21.06 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன. ஜியோவில் முதலீடு செய்த எட்டாவது நிறுவனம் அபுதாபி நிறுவனமாகும். முன்னதாக, ஃபேஸ்புக், முபாடாலா, விஸ்டா பாட்னர்ஸ், கே.கே.ஆர், ஜென்ரல் அட்லாண்டிக் மற்றும் சில்வர் லேக் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. உலக அளவில் தொடர்ச்சியாக அதிக அளவிலான முதலீட்டைப் பெறும் நிறுவனமாக ஜியோ உள்ளது.
சர்வதேச அளவிலான ஊரடங்குக்கு மத்தியில் இத்தனை முதலீடுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்க நிகழ்வு. இது இந்தியாவின் டிஜிட்டல் திறன் மற்றும் ஜியோவின் தொழில் யுக்தி கிடைத்த வெற்றி’ என்று ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.