கொரோனா தடுப்பு பணியில் இருந்த பெண் காவல் அதிகாரியை தேவையில்லாமல் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
கொரானா பாதிப்பு உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில்,தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும்,மக்கள் நலனை கருத்தில் கொண்டும் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக சுகாதாரத்துறை,காவல்துறை மற்றும் வருவாய்த்துறை 24 மணி நேரமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடுமையாக பணிபுரிந்து வருகின்றனர்.சமூக பரவலை தடுக்க ஊரங்கு போடப்பட்டுள்ள நிலையில் இதனை மதிக்காமல் வெளியே சுற்றும் நபர்களை காவல் துறையினர் முதலில் தங்கள் பாணியில் கவனித்நு வந்தனர்.பின்னர் பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டும்,வீட்டிலேயே இருக்கமாறு அறிவுரைகள் கூறியும் வந்தனர்.
ஆனால் தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் அதிகரித்து வந்ததால், மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றுவோருக்கு ரூ.100 அபராதம் விதிக்க அரசு உத்திரவிட்டது.இதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய போலீசார் மாஸ்க் இன்றி வருவோருக்கு ரூ.100 அபராதம் விதித்து வந்ததால் ஓரளவு மாஸ்க் அணிந்து செல்வது அதிகரித்தது.
நிலைமை இப்படி இருக்கையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாஸ்க் போடாமல் சாலைகளில் சுற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முத்தூர் போலீஸ் அவுட் போஸ்ட்டில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மாலா வாகனங்களில் மாஸ்க் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தார்.
அப்போது மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது,அவரிடம் உதவி ஆய்வாளர்,மாஸ்க் இன்றி சுற்றுவோருக்கு ரூ100அபராதம் விதிக்க அரசு கூறியுள்ளது பணத்தை எடுத்து வரவும் எனக்கூறிக்கொண்டிருந்தார்.
அப்போது இதனை முத்தூரை சேர்ந்த ஒரு நபர் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.இதனை கண்ட உதவி ஆய்வாளர் இதையெல்லாம் எடுப்பாயா என அவரை பளார் பளார் என அடிப்பதும் அதற்கு அந்த நபர் தான் முத்தூர் பேஸ்புக் பக்கத்திற்காக எடுப்பதாக கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மாஸ்க் அணியாமல் வந்த நபருக்கு அபராதம் விதித்த பெண் எஸ்.ஐ! லைக், ஷேர் பெற வீடியோ எடுத்த இளைஞருக்கு பளார்.@Vijaykarthikeyn @News18TamilNadu pic.twitter.com/DKXCW96OG6
— பாலாஜி பாஸ்கர் (@balajibhaskar2) April 22, 2020
கொரானாவில் மக்களை காக்க காவல்துறையினர் கடுமையாக போராடி வரும் சூழலில், அங்காங்கே ஒவ்வொரு ஊரின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கம் நடத்துவோர் சிலர் பரபரப்புக்காக வீடியோ எடுத்து பதிவிட்டு லைக்குகளுக்காக இவ்வாறு செய்வது அதிகரித்து வருவது வருந்தத்தக்கது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Lockdown