பெண்களுக்கு சுயமரியாதைதான் முக்கியம் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு சமீபத்தில் அவரது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சியின் வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு பல்வேறு தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது, “பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே எனது சிறு வயது சம்பவத்தை பகிர்ந்தேன், எனக்கு தைரியம் கொடுத்ததே என்னுடைய மகள்கள் தான். ஆணாதிக்கம் என்ற முறை அனைத்து துறைகளிலும் உள்ளது. இன்று வரை ஆண் என்ற கர்வத்திலிருந்து அவர்கள் வெளியே வரவே இல்லை.
இடஒதுக்கீடு இருந்தும் பெண்களுக்கான வாய்ப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை. பெண்கள் குறித்த சமூகப்பார்வை மாறினால் மட்டுமே பாதுகாப்பு உறுதியாகும். அரசியல், சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பாகுபாடு தொடர்கிறது. அனைத்துத் தடைகளையும் தகர்த்து பெண்கள் வரவேண்டியது அவசியம் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kushboo, News18 Tamil Nadu, Women's Day