புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் அருகே உள்ள எருக்குமணிப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி ஐஸ்வர்யா (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஐஸ்வர்யா இராப்பூசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடானடியாக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். பின்னர் இலுப்பூரிலிருந்து 108 ஆம்புலன்ஸில் ஐஸ்வர்யாவை அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை நோக்கி 108 ஆம்புலன்ஸ் சென்றபோது முத்துடையான்பட்டி என்னும் இடத்தில் ஐஸ்வர்யா பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டு துடிதுடித்துள்ளார், இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு ஆம்புலன்சிலேயே மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, ஆம்புலன்ஸ் பைலட் தேவா பாஸ்கரன் ஆகியோர் பிரசவம் பார்த்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய் ஐஸ்வர்யா மற்றும் குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த ஆண்டில் இலுப்பூர் 108 ஆம்புலன்ஸில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
படிக்க: தமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..
மேலும் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் பைலட்டை பொதுமக்கள் பாராட்டினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pudukkottai