பொங்கல் பரிசு பொருட்களை வாங்க யார் செல்ல வேண்டும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் திருடு போவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாளை பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்கப்படவுள்ள நிலையில், ஜனவரி 2 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த வருடம் ரூ.1000 வழங்கப்படுவதால் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு சார்பாக கொடுக்கப்படும் டோக்கன், ஸ்மார்ட் ரேஷன் அட்டையுடன் குடும்ப உறுப்பினர்கள் வந்தால் மட்டுமே ரூ.1000 கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குடும்ப உறுப்பினர்கள் கை ரேகை வைக்கவேண்டும். அப்போது தான் பணம் வழங்கப்படும். ரேஷன் அட்டையுடன் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இணைக்கப்படவில்லை என்றால் யாருடைய கை ரேகை இணைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியும்.
முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், சில ரேஷன் கடைகளில் கண் வழி சோதனை அமைப்புகள் உள்ளன. அந்த ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கண்களை காட்டி பொருட்களை வாங்கி செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal 2023, Pongal festival, Pongal Gift, Tamilnadu government