இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. தமிழ்நாட்டிலும் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு தீவிரமாக இருந்தது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி 9-ம் வகுப்பு 12-ம் வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவருகின்றனர். ஒரு சில இடங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது சீராக உள்ளது. இந்தநிலையில், மீதமுள்ள 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளைத் திறப்பது குறித்து செப்டம்பர் 14-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை நடத்தவுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஏற்கெனவே, ஆகஸ்ட் மாதம் முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தநிலையில், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆலோசனை செய்யவுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, School students