தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழக கடற்பகுதியில் மற்றும் வட தமிழக பகுதிகளை நோக்கி வீசும் வலுவான கிழக்கு திசை காற்று காரணமாகவும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதியில்
மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் முதல் கனமழைக்கு ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும். இதேபோல், சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று காலை 10 மணிக்கு இடி, மின்னலுடன் ஆரம்பித்த
மழை, இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. மாநகரில் மட்டும் 6 மணி நேரத்தில் 25 புள்ளி 4 சென்டி மீட்டர் மழை பதிவானது. வரலாறு காணாத இந்த கனமழையால், தூத்துக்குடி மாநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ரயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தூத்துக்குடியிலிருந்து கிளம்பிய வேண்டிய மைசூர், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்ல தாமதமாகின.
திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலையில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்தது. புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் உள்பிரகாரத்தில் மழைநீர் தேங்கியது. வெளிபிரகாரங்களில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.