தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி தற்போது குமரி கடற்கரை பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.இதன் காரணமாக தமிழகம், கேரளா, புதுவை, கடலோர ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் 5 நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரலாக கன மழையும், ஒரு சில இடங்களில் மிக கன மழை இருக்கும்.நேற்று தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை கொடுத்த நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் எச்சரிக்கை பொறுத்தவரையில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai rains, Heavy Rains