முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

Rain Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

  • 1-MIN READ
  • Last Updated :

மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக,தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 25.06.2022 முதல் 29.06.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Read More : சென்னையில் கார் மீது மரம் விழுந்து பெண் வங்கி மேலாளர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சின்னக்கலார் (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAB (கோயம்புத்தூர்) தலா 7, கீழநிலை (புதுக்கோட்டை), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 5, பூண்டி (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) தலா 4, சோலையார் (கோவை), பெரியார் (தேனி) தலா 3, திருத்தணி (திருவள்ளூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), அவலாஞ்சி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), தேவாலா (நீலகிரி), ஜி பஜார் (நீலகிரி), தாலுகா அலுவலகம், பந்தலூர் (நீலகிரி), சித்தார் (கன்னியாகுமரி), திருமயம் (புதுக்கோட்டை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தேக்கடி (தேனி), பெரியார் (தேனி), கோலியனூர் (விழுப்புரம்), தலா 2, பூந்தமல்லி (திருவள்ளூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), மேல் பவானி (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), வளவனூர் (விழுப்புரம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கடலூர் (கடலூர்) தலா 1

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

25.06.2022: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  காற்று வீசக்கூடும்.

இலட்சத்தீவு பகுதி, கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.06.2022, 27.06.2022: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலட்சத்தீவு பகுதி, கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28.06.2022: இலட்சத்தீவு பகுதி, கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.06.2022: கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Rain Update, Tamilnadu