முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடர் மழை : எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடர் மழை : எங்கெல்லாம் தெரியுமா?

மழை

மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் தமிழக மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

07.03.2023: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.

08.03.2023 முதல் 10.03.2022 வரை: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில்   லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.

11.03.2023: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Rain Update, Weather News in Tamil