முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் மழை பெய்யுமா... பனியின் தாக்கம் எப்போது குறையும்? - வானிலை அப்டேட்

தமிழகத்தில் மழை பெய்யுமா... பனியின் தாக்கம் எப்போது குறையும்? - வானிலை அப்டேட்

பனி மூட்டம்

பனி மூட்டம்

தமிழகத்தில் பனியின் தாக்கம் எப்போது குறையும் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் விளக்கமளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டில் வருகிற 14-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10.02.2023 முதல் 14.02.2023 வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்  மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பனியின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன்  அளித்துள்ள விளக்கத்தில், “ஜனவரி, பிப்ரவரி மாதங்களை குளிர் கால மாதங்களாகும். அதன்படி பிப்ரவரியில் வெப்பநிலையானது 30 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ளது. பகல் நேரங்களில் வெப்பம் காரணமாக நீர் நிலைகள் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாகி மேலே நகர்கிறது. இரவு நேரங்களில் மேகங்கள் இல்லாத சூழ்நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக காற்று இல்லாத காரணத்தினால், அந்த நீர்த்துளிகள் காற்றிலுள்ள தூசுக்களில் படிந்து இந்த மாதிரியான சூழலை நமக்கு தருகிறது. இது ஒருசில பகுதிகளில் நிகழக்கூடிய ஒன்று. தற்போது அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இந்த பனியின் தாக்கம் அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் குறைந்துவிடும்.” என அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Rain Update, Weather News in Tamil