விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள மஞ்சள் உடையப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில், செந்தில்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாத தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அய்யம்மாள், சரஸ்வதி இருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fire accident, Firecrackers, Virudunagar