நண்பர்களுடன் சேர்ந்து, 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாய்மாமன்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
நண்பர்களுடன் சேர்ந்து, 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாய்மாமன்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
விழுப்புரம் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்
Pocso Case | கூட்டு பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர் உட்பட 3 பேரை மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பள்ளிமாணவியை தாய்மாமன் உட்பட 10 பேர் சேர்ந்து தொடர் பாலியலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மேல்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 15வயது மகள் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி கடந்த சில தினங்களாக மனதளவிலும், உடலளவிலும் சோர்வாக இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று தமிழ் ஆசிரியை மாணவியை அழைத்து விசாரணை செய்துள்ளார். விசாரனையில் தனது தாய்மாமன் சசி என்பவர் தன்னை பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும். அவருடன் அவரது நண்பர்கள் 9 பேர் இணைந்து தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் ஹேமலதா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நீலாம்பரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இந்த சமபவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அனைத்து மகளிர் காவல்துறையினர் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட உறவினரான சசி, மணிகண்டன், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்து மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பாலியல் வண்புனர்வு சம்பவத்தில் தொடர்புடைய 7 நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ஆ.குணாநிதி (விழுப்புரம்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.