விழுப்புரத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி தன்னுடைய பெற்றோர் இறந்து விட்டதால் அவருடைய பெரியம்மா ஆதரவில் வளர்க்கப்பட்டார். இவர் பத்தாம் வகுப்பு வரை புதுவை விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த 1 ஆண்டிற்கு முன்பு ஈச்சங்குப்பம் கிராமத்திலுள்ள தன் பெரியம்மா வீட்டில் வசித்து 11 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே அவருடைய பெரியம்மா சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியம்மா செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பள்ளி மாணவியின் பெரியம்மா மகன் மோகன்(32),அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் மண்ணாங்கட்டி என்ற வெங்கடேசன் (77) மற்றும் இளையராஜா (28) ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பள்ளி சிறுமியை 10-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவலையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நள்ளிரவில் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
காவல் உயரதிகாரிகள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டதால் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி விழுப்புரம் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இதனை அடுத்து இந்த வழக்கு செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி நேற்று மாலை விழுப்புரம் காப்பகத்தில் இருந்த பள்ளி மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், பாபு, பிரபு மற்றும் சத்யராஜ் ஆகிய நான்கு பேரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் விசாரணையின் முடிவில் எட்டுப்பேர் சம்பந்தப்பட்ட உள்ளதாகவும் அதில் ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தொடர்ச்சியாக பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மறைத்ததாக புகார் அளித்த பள்ளி மாணவியின் பெரியம்மா மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்ததால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.