விழுப்புரத்தில் ப்ளஸ் டூ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கட்டட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருக்கும் ப்ளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். அந்தப்பெண் கட்டட வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார். அந்தப்பெண்ணுடன் புதுச்சேரியை சேர்ந்த கட்டட மேஸ்திரியான மணிகண்டன் என்பவர் உடன் வேலை செய்து வந்துள்ளார். மாணவிக்கு சில தினங்களாக உடல்நலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மகளை கட்டட மேஸ்திரியான மணிகண்டனுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மாணவியும் மணிகண்டனும் சினிமாவுக்கு சென்றுள்ளனர். திரையரங்கில் இருந்து திரும்பி வரும் போது மாணவி மயக்கம் வருவதாக கூறியுள்ளார். அருகில் உள்ள விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு பிறகு வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறி மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
விழுப்புரம் பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருந்த விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று அங்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். மாணவி மயக்க நிலையில் இருந்த போது சிறுமி என்றும் பாராமல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
அதணை தொடர்ந்து அந்தப்பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கட்டட மேஸ்திரியான மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு விடுதியில் அறை ஒதுக்கித் தந்த மேலாளர் தணிகைவேலுவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.