முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உயிரையே விட்டுவிடுவேன்... கண்ணீருடன் காட்சியளிக்கும் விஜயபாஸ்கரின் வைரல் போஸ்டர்

உயிரையே விட்டுவிடுவேன்... கண்ணீருடன் காட்சியளிக்கும் விஜயபாஸ்கரின் வைரல் போஸ்டர்

விஜயபாஸ்கர்.

விஜயபாஸ்கர்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் உயிரை விட்டுவிடுவேன் என்று பொருள்படும் வகையில், விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கண்ணீருடன் காட்சியளிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் உயிரை விட்டுவிடுவேன் என்று பொருள்படும் வகையில், விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கண்ணீருடன் காட்சியளிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர். இவர் மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் களம் காண்கிறார். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தந்தைக்கு ஆதரவாக விஜயபாஸ்கரின் இளையமகள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வைரலானது, வேனில் நின்றபடியே தந்தைக்காக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நான் விஜயபாஸ்கரின் இரண்டாவது பொண்ணு. அப்பா எப்போதும் உங்களுக்காகவே இரவும் பகலும் உழைக்கிறாரு, உங்களுக்காகத்தான் உழைப்பாரு, உங்களுக்கு ஏதாவதுனா துடிச்சுப் போயிருவாரு, உங்களுக்கு காது கேட்கலனா காது மிஷினா வருவாரு, கண்ணு தெரியலனா கண்ணாடியா வருவாரு, கஜா புயல்னா அவர் கரெண்டா வருவாரு, கொரோனானா அவர், மாத்திரை மருந்தா வருவாரு, பொங்கல்னா அவர் சீரா.. சிறப்பா வருவாரு.

தீபாவளி, பொங்கல்னா எங்களோட செலிப்ரேட் பண்ணாம உங்களோடுதான் செலிப்ரேட் பண்ணணும் என நினைப்பாரு. எங்க அப்பானு சொல்வதைவிட அவர் உங்க வீட்டு பிள்ளை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே, உங்க வீட்டு பிள்ளைக்கு நீங்க ஓட்டு போடுங்க” என்று கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுபோடுமாறு கூறி பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கே திரண்டிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாகமாக கைதட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.

இது போல பல்வேறு உத்திமுறைகளைக் கையாண்டு தேர்ததில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில், பிரச்சாம் செய்து வருகிறார் விஜயபாஸ்கர். இந்நிலையில், விஜயபாஸ்கர் கண்ணீருடன் காட்சியளிக்கும் ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதை விஜயபாஸ்கரின் நண்பர் ஒருவர் பகிர்ந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

Must Read : அரசியல் களத்தில் அதிமுக துண்டுடன் அமைச்சர் வேலுமணியின் மகன்

அதில், “வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டு கேட்பவர்களே, தோல்வி அடைந்தால் உயிரை விட்டுவிடுவேன் என்று கூறும் பொழுது, 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு பகல் பாராமல் ஒவ்வொரு கஷ்ட காலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும்??? முடிவு உங்கள் கையில்....” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: TN Assembly Election 2021, Vijayabaskar, Viralimalai Constituency