ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்துமுடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதில்
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம்,
காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான வெற்றியை பெற்றுள்ளனர். நேற்று மாலை வரை வார்டு உறுப்பினர்கள் 36 பேர் வெற்றி பெற்றிருந்தனர். 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மொத்தமாக 49 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
தற்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 9 மாவட்டங்களில் இதுவரை 109 பேர் வார்டு உறுப்பினர்களாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர்கள்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில், அரசியலில் முழுசாக ஈடுபடாமல் உள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்தநிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்ததிற்குட்பட்ட தாட்டிமானப்பல்லி ஊராட்சியில் 6 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் வெற்றி பெற்றார். அப்பகுதி திருட்டு பயம் அதிகம் உள்ளதாக மக்கள் அச்சப்பட்டனர். அப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று விரும்பினர். இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் வெற்றி பெற்ற மறுநாளே அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.