பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பரோலில் இருந்து வருகிறார். இந்நிலையில்,
வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள பேரறிவாளன் தற்போது ஒருமாத விடுப்பில், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உள்ளார்.
சிறையில் இருக்கும் போது அவருக்கு ஏற்பட்ட சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீரக தொற்றிர்க்காக சிடி ஸ்கேன் எடுப்பதற்காக வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பேரறிவாள அழைத்து வரப்பட்டார்.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
Must Read : நடிகர் ராமராஜன் நலமாக உள்ளார்... உடல் நலக்குறைவு என பரவும் வதந்திக்கு விளக்கம்
அதன் பின்னர், பேரறிவாளனுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அவரது இல்லத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டார்.
செய்தியாளர் - செல்வம், வேலூர்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.