சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் சேராமலேயே 117 பேர் பட்டம் பெற முயன்றது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பட்டப் படிப்புகளில் சேராமல் முறைகேடாக பட்டம் பெற முயன்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து சிண்டிகேட் குழு உறுப்பினர்கள் சென்னை பல்கலைக்கழக சட்டப் படிப்புகள் துறை பேராசிரியர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Also read... உரிமம் இல்லாமல் இறைச்சி கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டினால் வழக்கு பதிய வேண்டும் - நீதிமன்றம்!
இந்த விவகாரம் குறித்து இக்குழு விசாரணை செய்து ஒரு வார காலத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவு. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Also read... கோவையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை... : குனியமுத்தூர் போலீசார் விசாரணை
இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவும் சிண்டிகேட் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.