'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை கடந்த சில தினங்களுக்கு முன் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட எல்லைப்பகுதியான எடையூரில் உதயநிதி ஸ்டாலின் வந்து கொண்டிருந்தபோது அங்கே வயல்வெளியில் விவசாய பெண் தொழிலாளர்கள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவாரூர்(மா) திருத்துறைப்பூண்டி தொகுதி எடையூரில் வயல்வெளியில் வேளாண் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினேன். அந்த சகோதர - சகோதரிகளுடன் விரும்பி செல்ஃபி எடுத்துக்கொண்டேன். அவர்களுக்கு நன்றி.@kalaivanandmk @adalarasan_p#VidiyalaiNokki_StalininKural pic.twitter.com/Ukm0GaYXlY
— Udhay (@Udhaystalin) November 29, 2020
உதயநிதி ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வயலுக்குச் சென்று பெண் விவசாய தொழிலாளர்களிடம் விவசாயப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் படிக்க.. Rajinikanth | Rajini Makkal Mandram | மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த்.. நாளை ரசிகர்களுடன் சந்திப்பு எனத் தகவல்..
அதனைத் தொடர்ந்து விவசாய தொழிலாளர்களுடன் உதயநிதி ஸ்டாலின் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். அப்போது திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, DMK Campaign, Farmers, Selfie, Thiruvarur, TN Assembly Election 2021, Udhayanidhi Stalin