ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மின்தேவை குறைந்துள்ளதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1வது மற்றும் 4வது யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது.
இந்தியாவின் பழமையான அனல் மின் நிலையங்களில் ஒன்றான தூத்துக்குடி அனல் மின் நிலையம் கடந்த 1979ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் உள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் இயங்கி வருகிறது. இதனால் இவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபட்டு வருகிறது.
Also read: பள்ளி மாணவர்களுக்கு முட்டைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், ஏற்னெவே 5வது யூனிட் பழுது காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் தேவை குறைவு காரணமாக 3வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில் தற்போது 2வது யூனிட்டிலும் மின் தேவை குறைவு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாவது மற்றும் நான்காவது யுனிட்டில் மட்டும் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.