முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 6 மாத கர்ப்பம்... கைதாகாத இளைஞர்...! போராட்டத்தில் இறங்கிய 17 வயது சிறுமி

6 மாத கர்ப்பம்... கைதாகாத இளைஞர்...! போராட்டத்தில் இறங்கிய 17 வயது சிறுமி

வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி

வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி

மணப்பாறை அருகே தன்னை 6 மாத கர்ப்பமாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 17 வயது சிறுமி பெற்றோருடன் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • Last Updated :

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. தனது உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த 22 வயதான ராம்கி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பெற்றோருக்கு தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை அடுத்து உறவினரான ராம்கிக்கே மகளை திருமணம் செய்து வைத்துவிடலாம் என பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக ராம்கி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சிறுமியின் பெற்றோர் பேசியுள்ளனர். திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான பெண்ணை, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறிய ராம்கியின் பெற்றோர், சிறுமியின் பெற்றோரை தரக்குறைவாக பேசி அனுப்பியுள்ளனர்.


படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்


இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் ராம்கி மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராம்கி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த மே மாதம் 29 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை அவரை கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, பெற்றோருடன் மணப்பாறை மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

top videos

    சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா பேச்சுவார்த்தை நடத்தினார். ராம்கியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை சிறுமி கைவிட்டார்.

    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Manaparai