ஓபிசி பட்டியலின்கீழ் இடஒதுக்கீடு வழங்குவதற்கு திருநர் சமூகம் எதிர்ப்பு
ஓபிசி பட்டியலின்கீழ் இடஒதுக்கீடு வழங்குவதற்கு திருநர் சமூகம் எதிர்ப்பு
மாதிரிப் படம்
ஓபிசி பட்டியலில் மாற்றுப்பாலினத்தவர்களை சேர்ப்பதற்கான வரைவு குறிப்பை, மத்திய சமூக நீதித்துறை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. இதற்கு திருநர் உரிமை கூட்டியக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாற்றுப்பாலினத்தவர்களான திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளை சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய சமூக நீதித்துறை, ஓபிசி பட்டியலில் மாற்றுப்பாலினத்தவர்களை சேர்ப்பதற்கான வரைவு குறிப்பை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பிவைத்துள்ளது. கல்வி,வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், திருநங்கைகள், திருநம்பிகள் பயன்பெறும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தால், அந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் விரைவில் சட்டமாக நிறைவேற்றப்படும். மாற்றுப்பாலினத்தவர்களை சம நிலையில், சம அந்தஸ்தில் வைத்து மதிக்க வேண்டும் என்ற, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சமூக நீதித்துறையின் வரைவு குறிப்பிற்கு திருநர் உரிமை கூட்டியக்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி இடஒதுக்கீடு கேட்டு பல ஆண்டுகளாக போராடிவரும் நிலையில், ஓபிசி பட்டியலில் தங்களை சேர்பது சமூகநீதிக்கு எதிரானது என்று திருநர் உரிமை கூட்டியத்தின் கிரேஸ் பானு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு திருநர் மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிலையில், மத்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு என்று இரண்டிலும் தங்களுக்கான இரண்டு சதவீத தனி ஒதுக்கீட்டை உறுதிபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.