ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக திருச்சி - திருவனந்தபுரம் மற்றும் சென்னை - நாகர்கோவில் இடையேயான அந்தியோதயா ரயில்கள் பகுதி அளவுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள மேலப்பாளையம் - நாங்குநேரி ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ், நாளை மறுதினம் முதல் 21ம் தேதி வரை திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் எனவும், மறு மார்க்கத்தில் நாகர்கோவிலுக்குப் பதிலாக திருநெல்வேலியில் இருந்து புறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வரும் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுவதால், திருச்சியில் புறப்படும் ரயில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், மறு மார்க்கத்தில் திருவனந்தபுரத்திற்குப் பதிலாக திருநெல்வேலியில் இருந்து ரயில் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Railway, Southern railway, Train