2 நாள் சுற்றுப்பயணமாகத் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர
மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதோடு, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.
இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நாளைத் தொடங்குகிறது. இப்போட்டியைப் பிரதமர் மோடி நாளைத் தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்பு வரும் ஜூலை 29-ம் தேதி நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குப் பிரதமர் மோடி வருகை தருவதால் போக்குவரத்து தாமதம் ஆக வாய்ப்பு உள்ளதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் “மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் 29.07.2022 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமரின் வருகையையொட்டி விழா நடைபெறும் சர்தார் பட்டேல் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் காலை நேரங்களில் குறிப்பாகக் காந்தி மண்டபம் சாலை, காண்கார்டு சந்திப்பு, ஹால்டா சந்திப்பு, கிண்டி மேம்பாலம் முதல் சென்னை விமான நிலையம் வரை போக்குவரத்து மெதுவாகச் செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே விமான நிலையம் செல்வோர் மற்றும் வாகன ஒட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளைத் தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு விழாக்களையும் முடித்துவிட்டு 29-ம் தேதி காலை 11:55க்கு பிரதமர் டெல்லி திரும்புகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.