சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்தது. கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக 1 கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் 50 ரூபாய் குறைந்து நேற்று ரூபாய் 90 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தக்காளி அதிரடியாக 100 ரூபாய் குறைந்தது. இதனால் மொத்த விற்பனை 30 முதல் 35 வரை சிறுமொத்த கடைகளில் தக்காளி 1கிலோ 40 ரூபாய்க்கு இன்று காலை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவே ஒரு பெட்டியாக வாங்கினால் 30 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும். தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று வழக்கமாக ஆந்திரா கர்நாடக மஹாராஷ்டிரா ஆகிய வடமாநிலங்களில் இருந்து மொத்தம் 58 வன்டிகளில் சுமார் 850 டன் தக்காளி வந்துள்ள நிலையில் வியாபாரம் இன்று களைகட்ட தொடங்கியுள்ளது. மேலும் அத்தியாவசிய கீரை வகைகள் மரத்தை முழுவதும் தடை பட்டுள்ளதால் இன்றும் கீரை வகைகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.