பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 2014-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடந்த 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன், அமெரிக்கை நாராயணன், மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர் தாக்கல் செய்தனர். அதில், 7 பேரை விடுவிப்பது தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த மனுவை 2014-ம் ஆண்டில் விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம், மூலவழக்கின் விசாரணை முடிந்த பிறகு, இந்த மனுவை விசாரிக்கலாம் எனத் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும் வழக்கு தொடரத் தொடங்கினால், வழக்குகள் தேக்கமடையும் எனக் கூறி, விசாரணையை நிலுவையில் வைத்தார். இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான மூல வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுவை காலை 10. 45 மணிக்கு விசாரிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Judgement today, Perarivalan, Rajiv Gandhi Murder case, SC, Tamil Nadu govt