பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களின்போது டாஸ்மாக் கடைகளில் கோடிகளில் வருமானம் குவியும். இந்த நாட்களில் மதுப்பிரியர்கள் மதுபானங்களுடன் பண்டிகையை கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை என்பதால் தற்போது டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது. இதனிடையே திருவள்ளுவர் தின நாளில், டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் உள்ளிட்டவற்றில் மதுவை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய தினம் மதுபான கடைகள் செயல்படாது என்பதால் மதுகுடிப்போர், தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்க கடைகள் முன்பு நேற்று மாலையே திரண்டனர். பொங்கல் விடுமுறையை கொண்டாட கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் அட்டை பெட்டிகளில் புட்டிகளை வாங்கிச் சென்றனர்.
இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளதாக மதுகுடிப்போர் குற்றம்சாட்டுகின்றனர். போட்டிபோட்டுக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதால், வழக்கத்தை விட ஒரு மடங்கு கூடுதலாக விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.