முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டிஎன்பிஎஸ்சி தேர்வர்களில் நியாயமான கோரிக்கை கருத்தில் கொள்ளப்படும் - தேர்வாணையம் உறுதி

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களில் நியாயமான கோரிக்கை கருத்தில் கொள்ளப்படும் - தேர்வாணையம் உறுதி

காட்சிப் படம்

காட்சிப் படம்

TNPSC Exam | முற்பகல் தேர்வில் மட்டுமே கால தாமதம், பிற்பகல் தேர்வு சுமுகமாக எல்லா மையங்களிலும் குழப்பமின்றி நடந்தது - டிஎன்பிஎஸ்சி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

விடைத்தாள் மதிப்பீட்டின்போது தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும் எனவும் விடைத்தாள், வினாத்தாள் வரிசை மாறுபாட்டிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் உறுதியளித்துள்ளது.

குரூப் 2,2ஏ முதன்மை தேர்வில் ஏற்ப்பட்ட குளறுபடி TNPSC இன்று ஆலோசனை மேற்கொண்டது. தேர்வர்களுக்கு பதிவெண்ணுடன் ஒதுக்கப்பட வேண்டிய வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டு கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற முதன்மை தேர்வில் குளறுபடி குறித்து இன்று TNPSC செயலாளர், தேர்வுக்கட்டுபாட்டுதுறை அலுவலர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர்.

தேர்வில் குளறுபடி நடந்தது எப்படி, குளறுபடிக்கு காரணமானவர்கள் யார், தகுதித்தாளில் மட்டுமே நேர மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிற்பகலில் நடந்த எழுத்துத் தேர்வில் சில மையங்களில் நேர மாற்றம் நடந்ததற்கு என்ன காரணம்? மறுத் தேர்வுக்கான அவசியம் உள்ளதா? தகுதித் தேர்வில் அனைவரும் தேர்ச்சி வழங்கலாமா? பிற்பகல் தேர்வுக்கு தாமதமான தேர்வர்களுக்கு என்ன செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விடைத்தாள் மதிப்பீட்டின்போது தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும் எனவும் விடைத்தாள், வினாத்தாள் வரிசை மாறுபாட்டிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முற்பகல் தேர்வில் மட்டுமே கால தாமதம், பிற்பகல் தேர்வு சுமுகமாக எல்லா மையங்களிலும் குழப்பமின்றி நடந்தது எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

First published:

Tags: Exam, Group 2, TNPSC