மத்திய மின் கட்டமைப்பில் அல்லது தொகுப்பில் ஏற்பட்ட மின்னழுத்த வேறுபாடே சில இடங்களில் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம். 90% சரி செய்யப்பட்டுவிட்டது. இன்னும் 15 நிமிடங்களில் அனைத்து இடங்களிலும் மின்தடை சரியாகிவிடும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு நிலவி வருகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சேவுர், குன்னத்தூர், கண்ணமங்கலம், களம்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் 2 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல வந்தவாசி, செய்யார், போளூர் ஆகிய பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோணம், பார்வதிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரமாக மின் வெட்டு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிகுப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு 8 மணியில் இருந்து மின்சாரம் நிறுத்தப்படுள்ளது. திருநெல்வேலியிலும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்தடை குறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் மின் தடை.. பொதுமக்கள் அவதி
தி.மு.கவின் 2006-2011-ம் ஆண்டு ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும் கருத்து பதிவிட்டுவருகின்றனர். இந்தநிலையில், ‘மத்திய மின் கட்டமைப்பில் அல்லது தொகுப்பில் ஏற்பட்ட மின்னழுத்த வேறுபாடே சில இடங்களில் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம். 90% சரி செய்யப்பட்டுவிட்டது. இன்னும் 15 நிமிடங்களில் அனைத்து இடங்களிலும் மின்தடை சரியாகிவிடும் என்று மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.